ஜயங்கொண்டம் அருகே கதண்டு கடித்து 8 பேர் காயம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை கதண்டுகள் கடித்து 8 பேர் காயமடைந்தனர்.


அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை கதண்டுகள் கடித்து 8 பேர் காயமடைந்தனர்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் மனைவி தனலட்சுமி (60). இவர் அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் புதன்கிழமை தனக்குச் சொந்தமான வயலில் முந்திரிக் கொட்டை பறிக்கச் சென்றார்.
முந்திரி கொட்டையை பறிக்க மரக்கிளையை இழுத்தபோது அங்கு கூடு கட்டியிருந்த கதண்டுகள் தனலட்சுமி மற்றும் அவருடன் வந்த ஷர்மிளா(14), தமிழ்க்கொடி(18), ஸ்ரீதர்(12), கவின்குமார் (9), கல்கி(15), சுதன்(3), சிவசக்தி(14) ஆகியோரைக் கடித்தன. 
இதில் காயமடைந்த அனைவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com