முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
வளையல் அலங்காரத்தில் காளியம்மன்
By DIN | Published On : 04th August 2019 03:37 AM | Last Updated : 04th August 2019 03:37 AM | அ+அ அ- |

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அரியலூரில் உள்ள காளியம்மனுக்கு 50 ஆயிரம் வளையல் அலங்காரம் சனிக்கிழமை செய்யப்பட்டிருந்தது.
அரியலூர் கிருஷ்ணன் கோயில் தெருவிலுள்ள அருள்மிகு காளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் வளையல் அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு அம்மனுக்கு குங்கும அபிஷேகம் நடத்தப்பட்டு, 50 ஆயிரம் வளையல்கள் அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மழை வேண்டியும், அனைவரும் நலமுடன் இருக்க வேண்டியும் இந்த சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.