அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த நக்கம்பாடி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இக்கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பக்தர்கள் அலகு, காவடி, தீச்சட்டி, பால் குடம் எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.