புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது என்றார் ஆசிரியர் கூட்டணியின் அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை.
அரியலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்தியச் செயலர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: புதிய கல்விக் கொள்கைக்கு ஊதுகுழலாக தமிழக அரசு இருக்காமல், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டால் பழைய குலக்கல்வி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக அமையும். இந்த புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதைக் கண்டித்துபல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.