மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
By DIN | Published On : 09th August 2019 09:01 AM | Last Updated : 09th August 2019 09:01 AM | அ+அ அ- |

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைக் கண்டித்து, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராசன், மாநில குழு உறுப்பினர் சின்னதுரை, ஒன்றிய செயலர் வெங்கடாசலம், திமுக நகரச் செயலர் கருணாநிதி, திராவிடர் கழக மண்டலத் தலைவர் காமராஜ், காங்கிரஸ் வட்டாரக் கமிட்டி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ராமநாதன் உள்பட 25 பேர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு வந்த ஜயங்கொண்டம் போலீஸார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 25 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.