அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

திருமானூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு

திருமானூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு குழந்தைத் திருமணம்,பாலியல் தொந்தரவு குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் யசோதாதேவி தலைமை வகித்தார். 
சைல்டுலைன் அணி உறுப்பினர் அருண்ராஜ், அணித்தலைவர் அனுபிரியா, திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் உள்ளிட்டோர்  பயிற்சியில் பங்கேற்று  குழந்தைத் திருமணம், பாலியல் தொந்தரவுகள், அவற்றைத் தடுத்து நிறுத்துவது, இவைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் கொடுக்கும் முறைகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினர். 
பயிற்சியில் திருமானூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com