எலி மருந்தை சாப்பிட்ட  இளைஞர் பலி

திருமானூரில் எலி மருந்தை சாப்பிட்டஇளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். 

திருமானூரில் எலி மருந்தை சாப்பிட்டஇளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். 
திருமானூர் பிரதான சாலையில் வசித்து வருபவர் அய்யம்பெருமாள் மகன் ராஜ்(எ) அறிவழகன் (28).  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், விரக்தியில் கடந்த 7- ஆம் தேதி எலி மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 
இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு,  தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அறிவழகன் உயிரிழந்தார்.இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com