அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் பலத்த காயமடைந்தார்.
செந்துறை அருகிலுள்ள விழுப்பணங்குறிச்சியில் தனியார் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 5 - ஆம் வகுப்பு படித்து வரும் நல்லநாயகபுரம் சரவணன் மகன் சந்தோஷ்குமார்(10), புதன்கிழமை பள்ளி இடைவேளையின் போது மாணவர்களுடன் கழிவறைக்குச் சென்றார்.
அங்கு அவர் மீது கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. உடனே சகமாணவர்களின் அலறல் சப்தத்தை கேட்டு ஆசிரியர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்த சந்தோஷ்குமாரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து செந்துறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.