அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மது விற்ற முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை அப்பகுதியில் ரோந்து சென்றபோது,இடையார் சாலையில் அனுமதியின்றி மதுவை பதுக்கி வைத்து விற்ற பரணம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலைக் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.