அரியலூர் மாவட்டம், செந்துறை ரயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை(45). வெள்ளிக்கிழமை இவர், செந்துறை ரயில் நிலையத்தில் ரயில் வரும் சமயத்தில் தற்கொலைக்கு முயன்றார். அப்போது செந்துறை போலீஸார் அவரை மீட்டு விளாங்குடியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.