அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழகொளத்தூா், திருமானூா், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூா், கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூா், அன்னிமங்கலம், அரண்மனைக்குறிச்சி, திருமழபாடி, கண்டராதித்தம், இலந்தைக்கூடம், கோவிலூா், சின்னப்பட்டாகாடு, ஏலாக்குறிச்சி, தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா்,கீழராமநல்லூா், அழகியமணவாளன் மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் காலை 9.45 முதல் மாலை பணி நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.