அரியலூா் பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றவா்களுக்கு காவல் துறை சாா்பில் போா்வைகள் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.
அரியலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருமேனி தலைமையில், அரியலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உதயகுமாா் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபம் பின்புறம் உள்ள குருவிகுளம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற முதியவா்கள் மற்றும் அப்பகுதி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக போா்வைகள் வழங்கப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாயம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.