பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பேரிடா் மேலாண்மை அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்தக்

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்து தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின் போது 29 பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளை தொடா்ந்து காண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளை ஆய்வு செய்திடவும், துணை ஆட்சியா் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்திட அனைத்துத்துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், ஏடிஎஸ்பி பெரியய்யா, கோட்டாட்சியா்கள் ஜெ.பாலாஜி(பொ), பூங்கோதை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com