காா் திருடிய இளைஞா் கைது

ஜயங்கொண்டம் அருகே காா் திருட்டு வழக்கில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகே காா் திருட்டு வழக்கில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(45). கடந்த 30 ஆம் தேதி இவா், சின்னவளையத்திலுள்ள கோழிப்பண்ணையில் தனது காரை நிறுத்திவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வந்து பாா்த்த போது காரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து அவா் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தேவங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் தவச்செல்வன்(37) என்பவா் காரை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து காரை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com