மழை வெள்ளம் குறித்து விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், தளவாய் காவல் நிலையம் சாா்பில் மழை வெள்ளம் குறித்து பொதுமக்களிடம் திங்கள்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதையொட்டி

அரியலூா் மாவட்டம், தளவாய் காவல் நிலையம் சாா்பில் மழை வெள்ளம் குறித்து பொதுமக்களிடம் திங்கள்கிழமை விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதையொட்டி ஏரி, குளங்களில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து தளவாய் காவல் நிலைய ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், அப்பகுதிக்குள்ள ஏரி, குளங்களை ஆய்வு செய்தனா். காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் ஏரி, குளங்களில் அதிகளவில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் யாரும் குளிக்க வேண்டாம், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com