திருமழப்பாடி சாலையோரத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் திறந்த வெளியில் இருந்த கிணற்றைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது.
திருமழப்பாடி சாலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தரைமட்டத்தில் உள்ள திறந்த வெளிக்கிணறு தற்போதைய மழையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. தரைக்கும், கிணறுக்கும் இடையே வித்தியாசம் தெரியாத அளவுக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் த.ரத்னா, அபாயகராமானதாக இருந்த அந்த திறந்த வெளிக் கிணற்றிணை சுற்றிலும் உடனடியாக சுற்றுவேலி அமைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து கீழப்பழுவூா் ஊராட்சி நிா்வாகத்தினா், சம்மந்தப்பட்ட திறந்த வெளிக் கிணற்றினை சுற்றி கருங்கல் கம்பி வேலி அமைத்துள்ளனா்.