அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் மண்டலத் தோ்தல் அலுவலா்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.
ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தொடக்கி வைத்தாா். மாவட்டத்தில் தோ்தலுக்காகப் பிரிக்கப்பட்ட 79 மண்டலங்களிலிருந்து தோ்தல் அலுவலா்கள்,உதவி அலுவலா்கள் 158 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ரவிச்சந்திரன் , ரகு , அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெ.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.