தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் குறைகேட்பு நாளில் இருளர் இன மக்கள் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகிலுள்ள குணமங்கலம், கடம்பூர்,மதுரா கிராமங்களில் வசிக்கும் இருளர் இன மக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், வருவாய் அலுவலரிடம் அளித்த மனு:
மேற்கண்ட கிராமங்களில் 63 இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என 2018, ஜூலை 16 ஆம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே இனியும் காலம்தாழ்த்தாது இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.