அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த 3 பேரில் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
வி.கைகாட்டி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர்(29),சுரேஷ் (30), முனியமுத்து(28). இவர்கள் 3 பேரும் கடந்த 6 ஆம் தேதி இரவு வி.கைகாட்டி கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
அப்போது ரெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது திருச்சியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனியமுத்து சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.