ஆண்டிமடம் சார் பதிவகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சார்பதிவகத்தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் சார்பதிவகத்தில்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.05 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிமடம் சார்பதிவகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றுக்கு அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து,  அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போஸீஸார் திங்கள்கிழமை இரவு அங்கு சோதனை நடத்தினர். இங்கு சார்பதிவாளராகப் பணியாற்றும் சுமதி அறையில் சோதனையிட்ட போது, கணக்கில் வராத ரூ.1.05லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com