மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயிலில் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நடராஜர், சிவகாமிசுந்தரி அம்பாள் ஆகிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, சுவாமிக்கு கோயில் சிவாச்சாரியார் செந்தில் சிறப்பு அலங்காரம் செய்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தா.பழூர் நால்வர் வழிபாட்டு குழுவினர் சார்பில் சிவனடியார்கள் தேவராம், திருவாநனம், நடராஜர்பத்து ஆகிய திருப்பதிகங்கள் பாடினர். நிகழ்ச்சியில் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.