"பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது'

தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம்  தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களில் ஒருவரான தா. பழூர் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் கார்குடி கிராமத்துக்கு திங்கள்கிழமை  இரவு வந்த பொன். ராதாகிருஷ்ணன் சிவசந்திரன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் மேலும் தெரிவித்தது: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது. அதை நாம் போற்ற வேண்டும். தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மத்திய அரசு எடுத்து வருகிறது.
பிரதமர் மீதும் ராணுவத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்க்காது. தமிழக முதல்வரைச் சந்தித்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தார் குறித்தும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் பேச உள்ளேன். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com