பாமகவினர் கொண்டாட்டம்

மக்களவைத் தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி  உறுதியானதை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட 

மக்களவைத் தேர்தலில்  அதிமுகவுடன் கூட்டணி  உறுதியானதை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து  செவ்வாய்க்கிழமை கொண்டாடினர். 
செந்துறையில் பேருந்து நிலையம் அருகே பாமக மாநில உழவர் பேரியியக்க துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் வன்னியர் சங்க மாவட்டச் செயலர் செல்லரவி,குன்னம் தொகுதிச் செயலர் மொழியரசன், ஒன்றியச் செயலர்கள் கோபி,ராஜதுரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பட்டாசு வெடித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதேபோல் அரியலூர் பேருந்து நிலையம்,ஜயங்கொண்டம்,ஆண்டிமடம்,மீன்சுருட்டி,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கொண்டாடினர்.
பெரம்பலூரில்... புறநகர் பேருந்து நிலையம் எதிரே, அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கண்ணபிரான் தலைமையில், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மாவட்ட துணைச் செயலர் தெய்வேந்திரன், செய்தி தொடர்பாளர் வடமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com