ஜன.16-இல் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருவள்ளுவர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் ஜனவரி 16 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் ஜனவரி 16 ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்துக்கும் திருவள்ளுவர் தினமான ஜன.16 அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. எனவே இந்த நாளில், டாஸ்மாக் மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் செயல்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com