அன்னை தெரசா பள்ளியில் சமத்துவப் பொங்கல்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்ட


அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் புதுப்பானையில் பொங்கல் வைத்து, பின்னர் மஞ்சள் கொத்து,செங்கரும்பு உள்ளிட்ட பொருள்களை வைத்து சூரிய பகவானை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆசிரியைகள், ரங்கோலி, கம்பிக் கோலம், பூக்கோலம், பொங்கல் கோலம், விளக்குக் கோலம் போட்டிருந்தனர். தொடர்ந்து மாணவ,மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தாளாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், அரியலூர் அரிமா சங்கப் பொருளாளர் ராஜா, செயலர் சங்கர் ஆகியோர் பேசினர். பள்ளி துணைத் தலைவர் உஷா வரவேற்றார். பள்ளி முதல்வர் தாரணி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com