போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான


அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணி பெற்றுள்ளனர்.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் முதனிலைத் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முன்னோடி இலவச பயிற்சி வகுப்புகள் 23.01.2019 முதல் அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பக தன்னார்வப் பயிலும் வட்டத்தில் நடைபெற உள்ளது. 
இப்பயிற்சியில் சேர விரும்பும் பட்டதாரி இளைஞர்கள், பெண்கல் 21.01.2019 முதல் தங்களது பட்டதாரி கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து முன்பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com