அரியலூரில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ தலைமை வகித்தார்.மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.ஊரக வளர்ச்சித் துறை சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் கூட்டத்தில் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையாக ஊராட்சி செயலர்களுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்டத் தலைவர் மணிமாறன் வரவேற்றார். நிறைவில் நிர்வாகி முத்து நன்றி கூறினார்.