அரியலூர்
அரியலூரில் வாரந்தோறும் பருத்தி ஏல விற்பனை
அரியலூர், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைந்து ஜன. 22 முதல்
அரியலூர், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைந்து ஜன. 22 முதல் செவ்வாய்க்கிழமை தோறும் அரியலூர் ராஜாஜி நகர் அருகேயுள்ள அரியலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பருத்தி ஏலம் விற்பனை நடைபெறும்.
பருத்தி விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்யும் பருத்தியைக் கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு. விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.