கல்விப் பயணம்: அரசுப் பள்ளி மாணவர் வழியனுப்பி வைப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவரை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் சனிக்கிழமை வழியனுப்பி வைத்தனர். 

ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவரை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் சனிக்கிழமை வழியனுப்பி வைத்தனர். 
    மாநில அளவில் அறிவியல், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் அனுப்பத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கல்வி மாவட்டம் தேவாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ம. துஷ்யந்த் (14) உள்ளிட்ட 50 மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விப் பயணம் செல்லத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். 
இந்நிலையில், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாணவன் துஷ்யந்தை வழியனுப்பும் விழா நடைபெற்றது. 
 விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் க. அண்ணாதுரை,  உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ந. மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com