போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

அரியலூர் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இலந்தைகூடம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் காந்த் (16). இவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும்போது, அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ்-2 படித்துவந்த மாணவியுடன்  பழகி வந்துள்ளார். அப்போது, கடந்த டிசம்பர் மாதத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை அஜித்காந்த் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவியின் தாயார் 
அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தில் அஜித்காந்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com