அரியலூர் மாவட்டம், சன்னாவூர்(வ)கிராமத்தில் அண்மையில்(ஜூலை 10) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 66 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 55 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு, மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்து, பல்வேறு துறைகளின் சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 55 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தரராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி.ஹேசமந்த் காந்தி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் நா.சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.