அரியலூர்
துப்புரவு பணியாளரை தாக்கியவர் கைது
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே துப்புரவுப் பணியாளரைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே துப்புரவுப் பணியாளரைத் தாக்கியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விளாங்குடி காலனித் தெருவைத் சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர், விளாங்குடி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கணபதி (46) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மது போதையில் வந்த கணபதி பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர் லோகநாதனை தகாத வார்த்தையால் திட்டித் தாக்கியுள்ளார். இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கணபதியை சனிக்கிழமை கைது செய்தனர்.