இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், விபத்துகள், தீ விபத்துகள் , நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்டவர்களுக்கு ஜீவா ரக்ஷா விருது வழங்கப்படுகிறது.
அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான ஜீவா ரக்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலகம், ராஜாஜி நகர், செந்துறை சாலை, அரியலூர் என்ற முகவரியில் மூன்று நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமார்ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.