அரியலூர் மாவட்டத்தில்  ஜூன் 19-இல் ஜமாபந்தி

அரியலூர் மாவட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமா பந்தி (வருவாய் தீர்வாயம்) புதன்கிழமை (ஜூன் 19)  நடைபெறுகிறது.

அரியலூர் மாவட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமா பந்தி (வருவாய் தீர்வாயம்) புதன்கிழமை (ஜூன் 19)  நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
உடையார்பாளையம் வட்டம், தா.பழூர் உள் வட்டத்துக்குட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தா.பழூர், கோடங்குடி , நாயகனைப்பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி  ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்  மு.விஜயலட்சுமி தலைமையில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 19) நடைபெறுகிறது. 
அரியலூர் வட்டத்துக்குட்பட்ட பொட்டவெளி, இலுப்பையூர், ராயபுரம், சென்னிவனம், ஓட்டக்கோவில்,  அரியலூர் வடக்கு மற்றும் தெற்கு , கயர்லாபாத், கல்லங்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுகிறது. செந்துறை வட்டத்திற்குட்பட்ட ஆனந்தவாடி, உஞ்சினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களுக்கு செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும். ஆண்டிமடம் வட்டம், ஆண்டிமடம் உள்வட்டத்திற்குட்பட்ட ஓலையூர்,  ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கு ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரியலூர் கோட்டாட்சியர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த ஜமாபந்திகளில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நிலஅளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு கண்டு பயன் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com