அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோயில் மண்டபம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கயர்லாபாத் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.