அரியலூரில் ஜூன் 28-இல் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜூன் 28 ஆம்


அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஓய்வூதியர்கள் அரியலூர் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, கூடுதல் ஓய்வூதியம், திருந்திய ஓய்வூதியம் போன்ற தங்களது குறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு மாதாந்திர ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்ட விண்ணப்பம் என தலைப்பிட்டு மாவட்ட கருவூல அலுவலர், அரியலூர் என்ற முகவரிக்கு 24.06.2019-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அரியலூர் மாவட்ட கருவூல அலுவலரின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய ஆணைகள் மற்றும் நிலுவை தொகை வழங்கப்படும். 
மேலும், கூட்டத்தின் போது, ஓய்வூதிய விவரங்களை புத்தகத்தில் பதிவு செய்தல், நாமினேஷன் தாக்கல் செய்தல், வருமானவரி படிவம் 16 வழங்குதல், புதிய மருந்துவக் காப்பீடு, அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறுதல் போன்ற சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com