அரியலூர்: அரியலூர் மாவட்ட பள்ளிகளில் தலைக் கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மருவத்தூர் நடுநிலைப்பள்ளி, உடையார்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜயங்கொண்டம் மேல்நிலைப்பள்ளி, இரும்புலிக்குறிச்சி மேல்நிலைப்பள்ளி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். போக்குவரத்து ஆய்வாளர் ந. மதிவாணன் முன்னிலை வகித்தனர்.