உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
By DIN | Published On : 24th June 2019 08:32 AM | Last Updated : 24th June 2019 08:32 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு (50) விவசாயி. சனிக்கிழமை இரவு இவர், சுத்தமல்லி பெரிய ஓடையில் டிராக்டர் ஓட்டிச் செல்லும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சிற்றரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.