உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
உடையார்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு (50) விவசாயி. சனிக்கிழமை இரவு இவர், சுத்தமல்லி பெரிய ஓடையில் டிராக்டர் ஓட்டிச் செல்லும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது டிராக்டரின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சிற்றரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com