அரியலூரில் ஜூன் 28-இல் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும்

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் சார்பில் ஜூன் 28 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரில் வருகை புரிந்து தேர்வு செய்யவுள்ளனர். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும்,  முகாமில் பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, தொழிற்கல்வி டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் 28.06.2019 அன்று காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்துக்கு வருகைபுரிந்து பயன்பெறலாம். 
மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்   மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com