அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர். எரிவாயு நுகர்வோர், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள், ஆலோசனைகள் இருப்பின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.