கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்குமணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்

ஜயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டிக்கு குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் மாட்டுவண்டிக்கு குவாரி அமைக்க வேண்டும் என்று மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள உதயநத்தம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார்.மாவட்டத் தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் தனவேல்,ஆலோசகர் கணேசன் முன்னிலை வகித்தனர்.
விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், மீன்சுருட்டி செயலர் ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பஞ்சாபிகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இரவு நேரங்களில் லாரிக்கு மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவது கண்டனத்துக்குரியது. அரியலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிக்கான குவாரி அமைக்க வேண்டும். 
அவ்வாறு அமைக்காதபட்சத்தில் மார்ச் 25 ஆம் தேதி மணல் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியுரிமை ஆவணங்களை வட்டாட்சியரிடம் ஒப்படைப்பது,தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக உதய நத்தம் ராஜேந்திரன் வரவேற்றார். இறுதியில் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com