அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தமிழ்நாடு பாரத சாரண,சாரணியர் இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அரசு மருத்துவமனையில் தொடங்கிய பேரணி, தா.பழூர் சாலை, பேருந்து நிலையம், அண்ணாசிலை, கடைவீதி, நான்கு சாலை சந்திப்பு வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.
பேரணியில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்திச் சென்ற மாணவ, மாணவிகள் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினர்.
சாரண,சாரணியர் இயக்க மாவட்டச் செயலர் பாண்டியன் பேரணிக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்திருந்தார். சாரண ஆசிரியர்கள் ரோச் அலக்ஸாண்டர், முரளிதரன், சதீஷ், நர்மதா உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.