மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்திலுள்ள  ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பிலாக்குறிச்சி கிராமத்திலுள்ள  ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், விக்னேஸ்வரா பூஜை நடத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் கடம் புறப்பாடாகி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன்,விநாயகர், சுப்ரமணியர், சீயாண்டவர், பாப்பாத்தியம்மன், நொண்டிகருப்பு, மூப்பனார் ஆகிய சன்னதிகளிலுள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஸ்ரீ மகாசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிறுகடம்பூர் யோகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com