மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்தவர் சாவு

ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் சீனிவாசநகரைச் சேர்ந்தவர் கமாலுதீன் (60). வியாழக்கிழமை இரவு ஜயங்கொண்டம் கடைவீதிக்கு வந்து விட்டு, சிதம்பரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாலையின் குறுக்கே சென்ற நபர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்ட போது, கமாலுதீன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தொடர்ந்து ஜயங்கொண்டம் அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com