மீன்சுருட்டி அருகே ரூ.91 ஆயிரம் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பறக்கும் படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டன.


அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பறக்கும் படையினர் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.91 ஆயிரத்து 850 பறிமுதல் செய்யப்பட்டன.
மீன்சுருட்டி அருகே திருச்சி - சிதம்பரம் சாலை ராமதேவநல்லூரில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலரும் கூட்டுறவு சார்-பதிவாளருமான சசிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மீன்சுருட்டியிலிருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த மனோகர், ரூ.91 ஆயிரத்து 850-யை உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்து உடையார்பாளையம்  கோட்டாட்சியர் ஜோதி வசம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com