ஜயங்கொண்டம் நீதிமன்ற விழா

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் புதிய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோடை

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் புதிய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு நீதிமன்ற நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலர் செளந்தரராஜன், பொருளாளர் இளையராஜா, துணைத் தலைவர் இந்திரா ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து வழக்குரைஞர்களும் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகளைப்  பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.   வழக்குரைஞர் சிவராமன் வரவேற்றார். வழக்குரைஞர் மணிமாறன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com