அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகிலுள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் தண்ணீரின்றி கிடக்கும் ஏரியில் வெள்ளிக்கிழமை மழை வேண்டி வருண பகவானுக்கு படையலிட்டு, கையில் மண்சட்டி
ஏந்தி விவசாயிகள் வழிபாடு நடத்தினர்.
அப்போது, நல்லமழை பெய்ய வேண்டும். நீர் நிலைகள் நிரம்ப வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்கள் நோயின்றி வாழ வேண்டும் என வழிபாடு செய்தனர்.
கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பலரும் நிகழ்வில்பங்கேற்றனர்.