முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஜெமீன் ஆத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 18th May 2019 09:20 AM | Last Updated : 18th May 2019 09:20 AM | அ+அ அ- |

அனைத்து நாள்களிலும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் கிராமத்திலுள்ள மின்மாற்றி மூலம் அப்பகுதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் அண்மைக்காலமாக மும்முனை மின்சாரம் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே
வழங்கப்பட்டு வருவதால் சாகுபடி செய்யப்பட்ட காய்கறிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மின்சார வாரியத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், கூடுதலாக மின்மாற்றி அமைத்து, அனைத்து நாள்களிலும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள்
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.