முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நக்கம்பாடி சிறைமீட்ட அய்யனார் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 18th May 2019 09:21 AM | Last Updated : 18th May 2019 09:21 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தில் சிறைமீட்ட அய்யனார், முனியப்பா, கொப்பாட்டியம்மன், செல்லியம்மன், கருப்புசாமி, மருதையான், திரவுபதியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்களின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு முதல்கால பூஜைகளான வாஸ்துசாந்தி, மருத் சங்கிரகணம், அங்குரார்பணம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜைகளான நாடிசந்தனம், தேவதா ரக்ஷாபந்தனம், கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று மேற்கண்ட கோயில்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னர், கோபுர கலசங்களுக்கும், மூலவருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில், நக்கம்பாடி மற்றும் சுற்று வட்டார கிராம பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.