ரெட்டிப்பாளையம் தனியார் சிமென்ட் ஆலை குப்பை கிடங்கில் தீ விபத்து

அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் தனியார் சிமென்ட் தொழிற்சாலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள

அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் தனியார் சிமென்ட் தொழிற்சாலை வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.
ரெட்டிபாளையத்தில் தனியார் சிமென்ட் ஆலை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் அனல்மின் நிலையம் மூலம் மின்சாரம் தாயாரிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் கொண்டுவரப்பட்டு, வளாகத்தின் ஒரு பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்த குப்பைக்கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனையடுத்து, ஆலையில் உள்ள தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி சுமார் 2 மணி நேரம் புகை மண்டலாக காணப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com